O/L விடைத்தாள் திருத்தும் பணி ஆரம்பம்!

0
448

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பிடும் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

அதன்படி மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முன்னுரிமை வழங்குமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் பெறுபேறுகளை விரைவில் வெளியிட எதிர்பார்ப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.