பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் கைது!

0
601

பல்லேகல சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியின்போது காவல்துறை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்திற்குள் நுழையும் விளையாட்டு ரசிகர்களின் அனுமதிச் சீட்டுகளை பரிசோதித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மதுபோதையில் வந்த குழுவொன்று காவல்துறை உத்தியோகத்தர்களை கடுமையான வார்த்தைகளால் அச்சுறுத்தி ஆவேசமாகவும், கலவரமாகவும் நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது நிலைமையை கட்டுப்படுத்த முற்பட்ட வேளையில் தமது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் நால்வரும் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் 24 மற்றும் 28 வயதுடைய குருநாகல், கொஸ்லந்த மற்றும் கெக்கிராவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.