யாழில் பெண்கள் இருவரை மோதி தப்பிச் சென்ற ஹயஸ்

0
664

யாழ்.பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்கள் இருவரை ஹயஸ் ரக வாகனம் மோதிதள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

குறித்த விபத்து யாழ்ப்பாணம் பிரதான வீதியில், மார்ட்டின் வீதி சந்திக்கு அருகாமையில் நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்களும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய ஹயஸ் ரக வாகனம் வேகமாக அங்கிருந்து தப்பிச் சென்றதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.