யாழில் கார் மற்றும் துவிச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.
ஏ9 வீதி கொடிகாமம், கொயிலாமனை சந்திப் பகுதியில் நேற்று மாலை 3:00 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் கோரிக்கை
இந்நிலையில் உயிரிந்தவர் தொடர்பில் அடையாளம் காண உதவுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் பொலிஸ் நிலைய இலக்கமான 026 – 2050222 என்ற இலக்கத்திற்கு அழைத்து தெரிவிக்குமாறு கோரியுள்ளனர்.
மேலும் விபத்து தொடர்பில் கொடிகாம்ம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.