‘கணவனை கொலை செய்வது எப்படி’ என எழுதிய கட்டுரையின் மூலம் பிரபலமான அமெரிக்க பெண் எழுத்தாளருக்கு தனது கணவனை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பல குறு நாவல்களை எழுதியுள்ள நான்சி கிராம்ப்டனின் கணவரும் சமயல் கலை நிபுனருமான டானியேல் கிரெய்க் கடந்த 2018ம் ஆண்டு அவர் சமையல் வகுப்பு நடத்தி வந்த நிறுவனத்தில் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
அவரது பெயரில் இருந்த 9 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பணமும் இரண்டேகால் கோடி ரூபாய் வீடும் நான்சி வசம் சென்றது.
இதனையடுத்து கொலை நடந்து 2 ஆண்டுகளுக்கு பின் அப்பகுதியில் பதிவான CCTV காட்சிகளை போலிஸார் ஆராய்த போது நான்சி அங்கு இருந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இன்சூரன்ஸ் பணத்திற்காக அவர் கணவரை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.