வத்தளை ஏக்கலையில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியகியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களே இவ்வாறு துப்பிரயோகத்தை மேற்கொண்டதாகவும் கூறப்படுகின்றது.
இதில் காயமடைந்த இளைஞர் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரொருவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை அண்மைய நாட்களாக இலங்கையில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்போர் எண்னிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.