உக்ரைனில் ஒரே நாளில் 200 ராணுவ வீரர்கள் பலி!

0
501

உக்ரைனில் டான்பாஸ் பிராந்தியத்தில் உள்ள முக்கிய தொழில் நகரமான செவிரோடொனெட்ஸ்க் கிட்டத்தட்ட ரஷ்ய துருப்புக்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது.

இருப்பினும், செவிரோடொனெட்ஸ்க் நகரின் ஒரு சில பகுதிகளை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் உக்ரைன் வீரர்கள் நகரை முழுமையாக மீட்டெடுக்க ரஷ்ய துருப்புக்களுடன் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர்.

இதனிடையே செவிரோடொனெட்ஸ்க் நகர் மட்டும் இன்றி ஒட்டுமொத்த டான்பாஸ் பிராந்தியத்தையும் கைப்பற்ற ரஷ்ய துருப்புக்கள் தாக்குதல்களை நாளுக்குநாள் தீவிரப்படுத்தி வருகின்றன.

இதனால் உக்ரைன் ஒரு நாளைக்கு 100 முதல் 200 ராணுவ வீரர்களை இழந்து வருவதாக அந்த நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் கூறினார்.

Around 100 feared dead in Russian attack on military barracks in southern  Ukraine: Report - World News