தந்தையை கட்டையால் அடித்துக் கொன்ற மகன்

0
655

குருவிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொஹரபாவ பிரதேசத்தில் மகன் ஒருவர் தனது தந்தையை கட்டையால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இக்கொலை சம்பவம் நேற்று (12) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் உயிரிழந்தவர் 66 வயதுடைய பரகடுவ, பொஹொரபாவ பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குடிபோதையில் வந்த மகன் அவரது மனைவியை தாக்கிய போது அவரை காப்பற்ற முற்பட்ட தந்தையை தடியால் தாக்கிய கொலை செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் கொலையுடன் தொடர்புடைய 34 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை குருவிட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.