மன்னார் வைத்தியசாலையில் நோயாளர் விடுதியில் இடம்பெற்ற கத்திக் குத்தில் ஒருவர் படுகாயம்

0
793

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மன்னார் – நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த நபரே பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை விடுதியில் தங்கியிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.