நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் சம்பவங்களின் பின்னணியில் லண்டன் வாழ் சிங்கள இலங்கையர்!

0
724

சமகாலத்தில் இடம்பெறும் பல்வேறு குற்றச்சம்பவங்களுடன் பிரித்தானியாவில் குடியுரிமை பெற்ற இலங்கையர் ஒருவர் உள்ளதாக திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

குறித்த நபர் போதைப்பொருள் வியாபாரியான சிங்களவர் என்றும், அந்நபர் இலங்கையிலுள்ள பிரபலமான அரசியல்வாதிகளுடன் நெருக்கமாக செயற்படும் ஒருவர் எனவும் கூறப்படுகின்றது.

இவர் தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகளுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளதுடன் அரசியல்வாதிகள் சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளை கொள்வனவு செய்வதற்கு கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பிரபல அரசியல்வாதியொருவர் அண்மையில் பிரித்தானியாவுக்கு விஜயம் செய்திருந்த போது குறித்த நபரை ஹோட்டலில் சந்தித்துள்ளார். போதைப்பொருள் வியாபாரிக்கு இலங்கையில் மனைவி உள்ள நிலையில் அவர் ஒரு வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்து லண்டனில் குடியுரிமை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன் அவர் பிரித்தானியாவில் ஒரு உணவகமும், அந்நிய செலாவணி மையமும் வைத்திருப்பதாக தெரியவந்துள்ளது. பல பொலிஸ் அதிகாரிகளுடன் நெருங்கி செயற்படும் குறித்த நபர் துப்பாக்கி உரிமம் வழங்குமாறு, இலங்கை குற்ற பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருமுறை பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் நூற்றுக்கணக்கான கிலோ போதைப்பொருளைக் கைப்பற்றுவதற்கு பொலிஸாருக்கு துப்பு வழங்கும் நபர்கள் கொலை செய்யப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

குறித்த நபர் போதைப்பொருள் வியாபாரியான சிங்களவர் என்றும், அந்நபர் இலங்கையிலுள்ள பிரபலமான அரசியல்வாதிகளுடன் நெருக்கமாக செயற்படும் ஒருவர் எனவும் கூறப்படுகின்றது.

இவர் தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகளுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளதுடன் அரசியல்வாதிகள் சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளை கொள்வனவு செய்வதற்கு கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பிரபல அரசியல்வாதியொருவர் அண்மையில் பிரித்தானியாவுக்கு விஜயம் செய்திருந்த போது குறித்த நபரை ஹோட்டலில் சந்தித்துள்ளார். போதைப்பொருள் வியாபாரிக்கு இலங்கையில் மனைவி உள்ள நிலையில் அவர் ஒரு வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்து லண்டனில் குடியுரிமை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன் அவர் பிரித்தானியாவில் ஒரு உணவகமும், அந்நிய செலாவணி மையமும் வைத்திருப்பதாக தெரியவந்துள்ளது. பல பொலிஸ் அதிகாரிகளுடன் நெருங்கி செயற்படும் குறித்த நபர் துப்பாக்கி உரிமம் வழங்குமாறு, இலங்கை குற்ற பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருமுறை பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் நூற்றுக்கணக்கான கிலோ போதைப்பொருளைக் கைப்பற்றுவதற்கு பொலிஸாருக்கு துப்பு வழங்கும் நபர்கள் கொலை செய்யப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.