பிரிட்டனில் சிறுவனை கொலை செய்த ஆசிய நாட்டவர்

0
549

பிரித்தானியாவின் மான்செஸ்டரில் 14 வயது சிறுவன் கத்தியால் தாக்கி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கொலை வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மிகக் கொடூரமான தாக்குதல் என பொலிசார் குறிப்பிட்ட குறித்த சம்பவத்தில் சிறுவனின் தாயார் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். தொடர்புடைய சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுவனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் ஒரு மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலில் ஈடிபட்ட சந்தேக நபருக்கும் பாதிக்கப்பட்ட சிறுவன் மற்றும் தாயாருக்கும் தொடர்பிருக்கலாம் எனவும் இது குடும்ப வழக்காக இருக்கவே வாய்ப்பு எனவும் பொலிசார் நம்புகின்றனர்.

தாக்குதலில் ஈடுபட்ட நபர் 40 வயது கடந்த ஆசிய நாட்டவர் என பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். சுமார் 9.30 மணியளவில் பொதுமக்களே பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சிறுவனின் தாயாரையே குறித்த நபர் கத்தியால் தாக்கியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் தாயாரை காப்பாற்ற முயன்ற சிறுவன் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பில் இதுவரை கைது நடவடிக்கை ஏதும் முன்னெடுக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.