மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

0
736

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான எரிபொருள் மற்றும் நீர் பற்றாக்குறை காரணமாக எதிர்வரும் 13 ஆம் திகதி மற்றும் ஜூன் 15 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை 2 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை கூறியுள்ளது.

அதன்படி A முதல் W வரையிலான 20 பகுதிகளில் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை மின் தடை ஏற்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை ஜூன் 14 மற்றும் 19 ஆம் திகதிகளில் மாலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு மணித்தியாலத்துக்கு மட்டும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.