இந்தியாவில் மாணவியின் தவறான படத்தை பதிவிட்ட ஆசிரியர் கைது !

0
825

மாணவியின் தவறான படத்தை சமூகவலைதளம் ஒன்றில் பதிவிட்ட ஆசிரியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெலகாவி மாவட்டம் சவுதத்தி தாலுகா எக்குந்தி கிராமத்தில் அரசு உயர் தர பாடசாலை உள்ளது.

இங்கு மகேஷ் சிவலிங்கப்பா பிரதாரா (வயது 44) என்பவர் உடற்கல்வி ஆசிரியராக உள்ளார்.

இவர் பள்ளியில் படித்து வந்த ஒரு மாணவியிடம் தவறாக நடந்துக் கொடுத்து வந்ததுடன், அந்த மாணவியை அவர் ஆபாசமாக படங்களும் செல்போனில் எடுத்து வைத்துள்ளார்.

இந்த நிலையில் அந்த மாணவிக்கு, வேறொருவருடன் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது.

இதை அறிந்த உடற்கல்வி ஆசிரியர் மகேஷ், தனது செல்போன் வாட்ஸ்-அப் செயலில் மாணவியின் தவறான படத்தை பதிவிட்டுள்ளார். 

இதனால் மாணவியின் திருமணம் தடைப்பட்டு போனது. இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் குடும்பத்தினரும், கிராம மக்களும் நேற்று பாட்சாலைக்கு சென்று ஆசிரியர் மகேசை பிடித்த சரமாரியாக அடித்து உதைத்தனர்.

பின்னர் அவரை எமகுந்தி பொலிஸில் ஒப்படைத்தனர். அவரை பொலிஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.