ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு விடுக்கப்பட்ட கடும் உத்தரவு!

0
507

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இன்று இரவு 8.00 மணிக்கு முன்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சரணடையுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதுவரை அவரை கைது செய்வதற்கான கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை நிறைவேற்ற வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் இந்த ரிட் மனு மீதான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இறுதித் தீர்மானம் வரை ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க வேண்டாம் எனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் நீதவானுக்கு உத்தரவிட்டுள்ளது.