தெற்கு சூடானில் சிறுவனை குத்தி கொன்ற மாடு கைது!

0
637

தெற்கு சூடானில் வயல்வெளியில் உழுது கொண்டிருந்த மாடு அங்கிருந்த 12 வயதுச் சிறுவனை குத்தியதில், அச்சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.

இதையடுத்து, சிறுவனை கொலை செய்த குற்றத்துக்காக மாட்டையும் அதன் உரிமையாளரையும் தடுத்து வைத்திருப்பதாகச் சூடானியக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த வாரம் லேக்ஸ் ஸ்டேட் (Lakes State) மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்தது. அதேவேளை சூடானில் விலங்குகள் கைது செய்யப்படுவதும், தண்டனை கொடுக்கப்படுவதும் புதிய விடயம் அல்ல. அண்மையில் சூடானில், ஆடு ஒரு பெண்மணியை குத்திய நிலையில், அப் பெண் உயிரிழந்தார்.

இதற்காக குறித்த ஆட்டுக்கு மூன்றாண்டுகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அந்த ஆட்டிற்கு ராணுவ முகாமில் கடுமையான வேலைகள் கொடுக்கப்படுகிறது.

இதேவேளை, குற்றம் செய்த விலங்களின் தண்டனை காலம் முடிந்த பின்னர் அவை பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு இழப்பீடாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.