எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் தொழில்நுட்பக் கோளாறு சீரமைப்பு

0
553

சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் தொழில்நுட்பக் ​கோளாறு சீரமைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 20ம் திகதி தொடக்கம் மூடப்பட்டு இருந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் கடந்த சனிக்கிழமை தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

எனினும் இயந்திரங்கள் நீண்ட நாட்கள் செயற்படாமை காரணமாக அவற்றில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதன் காரணமாக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் மூட நேர்ந்தது இதனையடுத்து.

கடந்த இரண்டு நாட்களாக பெற்றோலியக் கூட்டுத்தாபன தொழில்நுட்பவியலாளர்கள் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு இயந்திரங்களை சீரமைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்று பிற்பகல் தொடக்கம் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது.