பிரதமர் ரணிலுக்கு பிரித்தானிய அழைப்பு!

0
590

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன் போது, இலங்கையின் தற்போயை நிலைமை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு விளக்கமளித்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது மற்றும் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கும், நாட்டின் ஏற்றுமதி சார்ந்த பொருளாதார நடவடிக்கைகளை கட்டியெழுப்புவதற்கும் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் உறுதியளித்ததாகவும் பிரதமர் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.