தேசபந்து தென்னகோனுக்கு விடுமுறை!

0
753

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு விடுமுறையில் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேல் மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் கடந்த வாரம் காவல்துறை மா அதிபருக்கு இரண்டு வாரங்களுக்கு விடுமுறை தேவை என அறிவித்திருந்தார்.

விடுமுறைக்கு அனுமதி கிடைத்ததை அடுத்து, சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனின் கடமைகளை உள்ளடக்கியதாக பிரதி காவல்துறை மா அதிபர் ஜகத் பலிஹக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.

வழமையாக, ஒரு சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபரின் பணியை மற்றொரு சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபரே பொறுப்பேற்கும் நிலையில், ஆனால் காவல்துறையின் மரபு இந்த முறை முறையாக செயற்படுத்தப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

அத்துடன், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபரை மேல் மாகாணத்தில் இருந்து நீக்குமாறு சட்டமா அதிபரின் உத்தரவும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

சட்டமா அதிபரினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நடைமுறைப்படுத்தப்படாமை கடும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவல்துறை மா அதிபருக்கு சட்டமா அதிபர் உத்தரவு பிறப்பித்து ஒரு வாரத்திற்கு மேலாகியும் இதுவரை அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.