காங்கோவில் 27 பேர் சுட்டுக்கொலை!

0
603

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) ஆதரவு கிளா்ச்சிப் படையினரால் 27 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக அந்த நாட்டு செஞ்சிலுவை சங்கமும் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டில் வன்முறை சம்பவங்களைக் கண்காணித்து வரும் கேஎஸ்டி டிராக்கா் அமைப்பு வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ஜனநாயகக் கூட்டணிப் படை (ஏடிஎஃப்) எனப்படும் கிளா்ச்சிக் குழுவினா், பியு மன்யாமா கிராமத்தில் 27 பேரை சுட்டுக் கொன்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு சென்ற தங்களது படையினா் 7 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றதாக இராணுவம் தெரிவித்தது.