மத்திய வங்கி ஆளுநருக்கு ஜனாதிபதி பாராட்டு!

0
688

இலங்கை மத்திய வங்கி ஆளுநராக நந்தலால் வீரசிங்க பதவியேற்ற குறுகிய காலத்திற்குள் நிலவிய நிதி நெருக்கடியைக் கட்டுப்படுத்தவும், அவற்றைத் தணிக்கவும் அவர் எடுத்த நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

அதன்படி எந்தவொரு அரசியல் தலையீடும் இன்றி தொடர்ந்தும் மத்திய வங்கியின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.