சிறுமி ஆயிஷாவின் சடலம் மீட்கப்பட்ட இடத்தின் புகைப்படங்கள்!

0
1387

பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் கடந்த ஆம் திகதி காணாமல்போய், நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்ட சிறுமி விவகாரம் தொடர்பிலான விசாரணை சி.ஐ.டியினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அட்டுலுகம அலுகஸ்ஸாலி வித்தியாலயத்தில் 4ஆம் தரத்தில் கல்வி கற்கும் 9 வயதுடைய பாத்திமா ஆயிஷா என்ற சிறுமியே, காணாமல்போய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தனது வீட்டில் இருந்து 200 மீற்றர் தூரத்தில் உள்ள கடையொன்றில் கோழி இறைச்சி வாங்கச் சென்ற போதே சிறுமி காணாமல் போயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அச்சிறுமியை தேடும் நடவடிக்கைகள், பொலிஸ் ​மோப்பநாய்க் கொண்டு முன்னெடுக்கப்பட்டன. அச்சிறுமியின் சடலம், சேற்றுக்குள் இருந்தே, நேற்று மாலை மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Gallery
Gallery
Gallery