கல்முனை வைத்தியசாலையில் வைத்தியர் வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு

0
959

அம்பாறை கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இளம் வைத்திய அதிகாரியுடன் பிறிதொரு குடும்பப்பெண்ணுடன் வைத்தியசாலை தங்குமிட அறையில் தனிமையில் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றதாக கூறப்படும் நிலையில், சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றி இடமாற்றம் செல்லவிருந்த 36 வயதுடைய வைத்தியர் இரத்தினபுரி மாவட்டம், பெல்மதுளை பகுதியைச் சேர்ந்தவர் என கூறப்படுகின்றது.

கடந்த காலங்களில் இவ்வைத்தியசாலையில் கதிரியக்கவியல் (Radiologist Specialist) விசேட வைத்திய நிபுணராகக் கடமையாற்றி வந்த நிலையில் பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு இன்று இடமாற்றலாகிச் செல்லவிருந்தார்.

இந்நிலையில், வைத்தியருக்கு சம்மாந்துறை பகுதியைச்சேர்ந்த 28 வயதுடைய பெண்ணிற்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகின்றது.

பெண்ணின் கணவர் தொழில் நிமிர்த்தம் மத்திய கிழக்கு நாடொன்றில் பணியாற்றி வருவதுடன் 3 வயதில் குழந்தை ஒன்றுமுள்ளது. இந்நிலையில் மேற்படி இவ்விருவரும் சம்மாந்துறை பகுதியிலுள்ள தனியார் மருத்துவ சிகிச்சை பிரிவில் சந்தித்துள்ளதுடன் தத்தமது காதல் தொடர்பினையும் ஏற்படுத்தி கொண்டுள்ளதாகவும் கடந்த காலங்களில் மட்டக்களப்பு, அம்பாறை பகுதியிலுள்ள ஹோட்டல்கள், உல்லாச விடுதிகளுக்கு பயணம் செய்து உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

அதன்பின்னர் திடீரென வைத்தியருக்கு இடமாற்ற உத்தரவு கிடைக்கப்பெற்ற நிலையில் தான் சேவை மேற்கொண்ட கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தனக்கென வழங்கப்பட்ட தங்குமிட அறைக்கு யுவதியை அழைத்துச் சென்றுள்ளார்.

இதன் போது வைத்தியரின் செயலை அறிந்து பொதுமக்களும் வைத்தியசாலைத் தரப்பின் சிலரும் இணைந்து தங்குமிட அறையிலிருந்த வைத்தியர் யுவதியை உடனடியாக அருகிலுள்ள பள்ளிவாசலுக்கு அழைத்துச்செல்ல வேண்டுமென கூறியதால் அங்கு சலசப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரின் முறைப்பாட்டிற்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வைத்தியர் மற்றும் யுவதியை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு இருவரிடமும் வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் வைத்தியருக்கெதிராக உள்ளக விசாரணையொன்று மேற்கொள்ளப்பட்டு ஒழுக்காற்று நடவக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.