மஹிந்தவின் மாலைத்தீவு சர்ச்சை: வெளியான முக்கிய தகவல்!

0
514

இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) அடைக்கலம் கேட்கவில்லை என்று மாலைத்தீவு மறுப்பு தெரிவித்துள்ளது.  

இலங்கையில் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ, பொதுமக்களின் கடுமையான போராட்டம் காரணமாக கடந்த 9-ம் திகதி பதவி விலகினார். அத்துடன் நாடு முழுவதும் வன்முறை மூண்டதால் அவரது பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. 

இதனால் ராஜபக்ஷ, தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் மாலைத்தீவில் அடைக்கலம் கேட்டதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன.

ஆனால் மாலைத்தீவிடம் மஹிந்த ராஜபக்ஷ அடைக்கலம் கேட்கவில்லை என மாலைத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் மறுத்துள்ளார். 

கொழும்புவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முகமது நஷீத்,

இது போன்ற தவறான செய்திகள் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை சீர்குலைக்க சதி நடப்பதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்,

‘இது முற்றிலும் தவறான செய்தி. இந்த புனைக்கதைகளை வெளியிடும் சக்திகள் மாலைத்தீவுகளில் இருப்பது கவலையாக உள்ளது’ என்று கூறினார்.

இலங்கை பயணத்தின்போது மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவில்லை என்று கூறிய நஷீத், இந்த பொருளாதார நெருக்கடிக்கு மாலைத்தீவால் எவ்வாறு உதவ முடியும்? என்பது குறித்து ஆலோசிக்கவே இலங்கை வந்ததாகவும் தெரிவித்தார்.