அமெரிக்காவில் ஆரம்பபாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்பட்ட ஆசிரியை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
சம்பவத்தில் இவா மிரெலெஸ் என்ற ஆசிரியையே கொல்லப்பட்டுள்ளார்.
ரொப் ஆரம்ப பாடசாலையில் நான்காம் வகுப்பு மாணவர்களிற்கு கற்பித்து இவா மிரெலெஸ் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த ஆசிரியர் 17 வருடங்கள் இந்த பாடசாலையில் கற்பித்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்றபோது மாணவர்களை பாதுகாக்க முயன்றவேளை அவர் கொல்லப்பட்டார் என அவரது உறவினர் தெரிவித்துள்ளார்.