45 வருடகால அரசியல் வரலாற்றில் முதன் முறையாக ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சை பொறுப்பேற்றார் சர்வக்கட்சி அரசாங்கத்தின் நிதி அமைச்சு பதவி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில், ரணில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இதன் மூலம் இலங்கையின் 24 ஆவது நிதி அமைச்சராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது .