மைத்துனருக்கு உதவப்போய் மாட்டிக்கொண்ட மச்சான்!

0
931

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தற்போது இடம்பெற்று வரும் நிலையில் தனது மைத்துனருக்காக பரீட்சை எழுதிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் கல்முனை பிரதேசத்தில் உள்ள பரீட்சை நிலையமொன்றிலேயே இடம்பெற்றுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடையவர் இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தனது மைத்துனர் சார்பில் தோற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை மண்டபத்தின் மேற்பார்வையாளர் சந்தேக நபர் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து பரீட்சார்த்தி மற்றும் அவருக்காக தோற்றிய நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைதான சந்தேகநபர்கள் இருவரும் இன்று கல்முனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.