எதிர்காலத்தில் மதுபான உற்பத்தி பாதிக்கப்படும் என கலால் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிப்பு

0
531

மதுபான உற்பத்திக்கு தேவையான பாதுகாக்கப்பட்ட எத்தனால் ஸ்பிரிட் இருப்புக்கள் இல்லாததால் எதிர்காலத்தில் மதுபான உற்பத்தி பாதிக்கப்படும் என கலால் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆண்டுக்கு 32 – 34 மில்லியன் லீற்றர் ஸ்பிரிட்கள் மதுபானம் தயாரிக்கவும், மேலும் 3 மில்லியன் லீற்றர் ஸ்பிரிட் மருந்துத் தின்னர் உள்ளிட்ட மருந்துப் பொருட்களுக்குத் தேவைப்படுவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

கரும்பு தட்டுப்பாடு, கோதுமை விளைச்சல் தட்டுப்பாடு, மின்வெட்டு, எரிபொருள் பிரச்னை, உரத் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த ஆண்டு மதுபான உற்பத்திக்கு தேவையான எத்தனோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கலால் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.