சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 67 பேர் கைது!

0
524

திருகோணமலை கடற்பகுதியில் சல்லிசம்பல்தீவு பகுதியில் இலங்கை கடற்படையினர் நேற்று இரவு மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக இடம்பெயர முயன்ற 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படை குழு ஒன்று நிலாவெளி பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கைது செய்யப்பட்டவர்களில் 7 பெண்களும் 3 குழந்தைகளும் அடங்குவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் வாழ் வழியின்றி அவதிப்படுகின்றனர். அரசாங்கத்துக்கு எதிராக தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் மக்களிற்கு தேவையான அத்தியாவசிய பொருளுக்கு கூட கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது.

பட்டினியால் மக்கள் உயிரிழக்கும் நிலைக்கு தள்ளப்படலாம் என உலக வல்லுநர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் மக்கள் தஞ்சம் தேடி நாட்டைவிட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.