புலம்பெயர் இலங்கையர்களின் உதவி கூறிய பிரதமர்!

0
495

 நாட்டின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் , நாட்டின் பொருளாதார பிரச்சினைக்குத் தீர்வு காணும் என்ற நம்பிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக தெரிவித்த மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் ஸாலி , புலம்பெயர் இலங்கையர்களும் நாட்டுக்கு உதவ முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.

இது தொடர்பில் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் ஸாலி தெரிவிக்கையில்,

“அந்நியச்செலாவணி வருமானத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியை சரிசெய்வதற்கு, நாட்டிற்குள் அதிகளவு டொலர் வரவேண்டும். எனவே புலம்பெயர் இலங்கையர்கள், வௌிநாடுகளில் இதைச் சேகரித்து இலங்கை மத்திய வங்கிக்கு அனுப்பும் முயற்சிகளில் இறங்குவது அவசியம் என கூறிய அவர் இவ்விடயத்தில், குறுகிய மனநிலையில் செயற்படக் கூடாது எனவும் கூறினார்.

சகல கட்சிகளின் தலைவர்களும் ரணில் தலைமையிலான அரசுக்கு ஆதரவு வழங்க முன்வந்திருப்பதால், பொருளாதார மேம்பாடுகளை அடைந்துகொள்ளும் வழிகள் விரைவில் திறக்கப்படலாம் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

எனவே, இளைஞர்கள் இவ்விடயம் பற்றி சிரத்தை கொள்வதுதான் இன்றைய அவசர தேவை. உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிப்பதற்குத் தேவையான அமைதியை நாட்டில் கொண்டுவரும் பொறுப்பையும், சுற்றுலாப் பயணிகளை அதிகளவு உள்ளீர்க்கும் சூழலையும் இளைஞர்களே ஏற்படுத்த வேண்டும் எனவும் அஸாத் ஸாலி குறிப்பிட்டார்.