எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

0
486

நாளைய தினம் மற்றொரு தொகை டீசல் மற்றும் பெற்றோல் தறையிறக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் டீசல் இருப்புக்கள் தடைப்பட்டுள்ளதாகவும் விநியோகம் தொடரும் எனவும் அமைச்சர் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அதேபோல், அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் 92 மற்றும் 95 ரக பெற்றோல் விநியோகம் நேற்று (20-05-2022) காலை மீண்டும் ஆரம்பமானதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.