மஹிந்தவின் சகா வீட்டில் தங்கநகைகள் மாயம்!

0
505

கண்டி மாநகர சபை பொதுஜன பெரமுன உறுப்பினர் சங்கீத் சில்வாவின் வீட்டில் 35 பவுண் நகை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தில் அவரது வீ தீயிடப்பட்டதில் சுமார் 34 பவுண் எடை கொண்ட தங்க நகைகள் காணாமல் போயுள்ளதாக, அவரின் மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கண்டியில் அமைக்கப்பட்டிருந்த கோட்டாகோகம கிளை கடந்த தாக்கப்பட்டதையடுத்து கண்டி போகம்பறைப் பிரதேசத்திலுள்ள கண்டி மாநகர சபை உறுப்பினர் சங்கீத் சில்வாவின் வீடும் பொதுமக்களால் தாக்கப்பட்டது.

சம்பவத்தின் பின்னர் வீட்டிலிருந்த 34 பவுண் எடை கொண்ட தங்க நகைகள் மற்றும் 8 இலட்ச ரூபா ரொக்கப் பணம் உட்பட இன்னும் பெறுமதியான பல பொருட்கள் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி கே.ஜீ ரேனுகா தர்மவங்ச, கண்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.