ரஷ்ய அதிபர் புடினுக்கு தடை விதிக்க திட்டமிடும் கனடா!

0
514

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உட்பட பலரை நாட்டிற்குள் நுழைய தடை விதிக்க கனடா திட்டமிட்டுள்ளது.

உக்ரைன் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் தொடர்ந்து விதிக்கப்பட்டுவரும் நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் அவரது அரசாங்க மற்றும் இராணுவத்தைச் சேர்ந்த 1,000 உறுப்பினர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடைசெய்யும் மசோதாவை கனடா செவ்வாயன்று செனட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.

உக்ரைனில் மரியுபோல் நகரத்தில் உள்ள அசோவ்ஸ்டல் எஃகு ஆலையை ரஷ்யா கைப்பற்றியதாகத் தெரியவந்த நிலையில், இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு தடை விதிக்க திட்டமிடும் கனடா

உக்ரைன் போரின் தொடக்கத்திலிருந்து, கனடா மற்றும் பிற மேற்கத்திய நட்பு நாடுகளால் ரஷ்யாவிற்கு எதிராக பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

கனடாவும் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பி வருகிறது. இதற்கு பதிலடியாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் மற்றும் 600-க்கும் மேற்பட்ட கனேடியர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய ரஷ்யாவும் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவின் நடவடிக்கைக்கு பழிக்கு பழி வாங்கும் விதமாக கனடாவின் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.