நாட்டில் ஏற்பட்ட வன்முறைகள் சம்பந்தமாக 883 க்கும் மேற்பட்டோர் கைது!

0
585

கடந்த 09 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட கலவரம் மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 883 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களில் அரசியல்வாதிகள் உட்பட அரசியல் ஆதரவாளர்களும் அடங்குவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் கொழும்பு காலிமுகத் திடல் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து நாட்டில் வன்முறைகள் ஏற்பட்டதுடன் பொது மக்கள் ஆளும் கட்சியின் அரசியல்வாதிகள் மற்றும் ஆதரவாளர்களின் வாகனங்கள் மற்றும் வீடுகளை எரித்து பதில் தாக்குதல் நடத்தினர்.