எதிர்வரும் வரும் இரு தினங்களுக்கான மின்வெட்டு தொடர்பான தகவல்!

0
781

எதிர்வரும் இரு தினங்கள் மின்வெட்டு நேரம் குறித்த தகவலை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி 19, 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் 3 மணித்தியாலம் 40 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக, தற்போது அமுலாக்கப்படும் மின் தடை நேரத்தை எதிர்காலத்தில் குறைக்க முடியும் என மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.