மகிந்தவின் மற்றுமொரு சகா சிக்கினார்!

0
480

மொரட்டுவ நகர முதல்வர் சமன் லால் கைது செய்யப்பட்டுள்ளார். 

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சரணடைந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

காலிமுகத்திடல்  கடந்த 9ஆம் திகதி நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதற்கு முன்னர் குறித்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மிலான் ஜயதிலக்க, சனத் நிஷாந்த மற்றும் சமூக ஆர்வலர் டான்  பிரியசாத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.