கொழும்பு மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!

0
1055

எதிர்வரும் 21 ஆம் கிகதி சனிக்கிழமை கொழும்பின் பல பகுதிகளில் 10 மணித்தியால நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 12, 13, 14, மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு எதிர்வரும் 21 ஆம் கிகதி சனிக்கிழமை இரவு 10 மணி முதல் ஞாயிற்றுகிழமை காலை 8 மணி வரை இவ்வாறு நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொழும்பு 1 மற்றும் 11 ஆகிய பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.