நாடாளுமன்ற உறுப்பினர் கொலை தொடர்பில் இருவர் கைது

0
618

நாடாளுமன்ற உறுப்பினரின் மரணம் தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது பாதுகாப்பு பொலிஸாரின் மரணம் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் இன்று (17) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நிட்டம்புவ மற்றும் பொல்கஹவெல பிரதேசங்களைச் சேர்ந்த 22 வயதுடையவர்களாவர்.

சம்பவத்தில் சந்தேக நபர்கள் அணிந்திருந்த இரண்டு ஆடைகள் மற்றும் கத்தி ஒன்றையும் புலனாய்வாளர்கள் மீட்டுள்ளனர். சந்தேக நபர்களில் ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.