இலங்கையில் அரசாஙகத்திற்கு எதிராக காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகை வளாகத்தில் இடம்பெற்ற போராட்டத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உள்ளிட்ட 22 பேரை கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் பணிப்புரை விடுத்துள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து சட்டமா அதிபர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சந்தேக நபர்கள்:
- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
- சனத் நிஷாந்த
- சஞ்சீவ எதிரிமான்ன
- மிலான் ஜயதிலக்க
- தேசபந்து தென்னகோன் (மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்)
- டான் பிரியசாத்
- மஹிந்த கஹந்தகம
- நாலக விஜேசிங்க
- பந்துல ஜெயமான்ன
- தினேத் கீதக
- சமன்லால் பெர்னாண்டோ
- அராபி வசந்த
- சுபாஷ் (தெஹிவளை நகர சபை)
- அமல் சில்வா
- சமீர சதுரங்க ஆரியரத்ன
- ருவன்வெல்லே ரமணி
- துசித ரணபாகு
- சஜித் சாரங்க
- புஷ்பலால் குமாரசிங்க
- நிஷாந்த மெண்டிஸ்
- புஷ்பகுமார (முன்னாள் இராணுவ சிப்பாய்)
- சவின் பெர்னாண்டோ (வென்னப்புவ)
ஏற்கனவே பயணத்தடை பெற்றவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.