ராஜபக்சக்களின் குடும்பத்திற்குள் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக எதிர்வரும் காலங்களில் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகி தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரச தலைவராகலாம் என மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் முன்னாள் பிரதமரை அரச தலைவர் காப்பாற்றாத காரணத்தினால் குடும்பத்திற்குள் கடும் அரசியல் மோதல் ஏற்பட்டுள்ளதுடன்,ஒருவரையொருவர் காட்டிக்கொடுக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளாா்.