இன்று மீண்டும் ஊரடங்கு உத்தரவு!

0
668

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16வது பிரிவின் விதிகளுக்கு அமைய இன்று இரவு 8.00 மணி முதல் நாளை அதிகாலை 5.00 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.

கடந்த 09ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் தாக்குதலினால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு சட்டமானது மீண்டும் தொடங்கவுள்ளது.

அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் கீழ் தவிர, பொது சாலை, ரயில் பாதை, பொது பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது வேறு எந்த பொது கடற்கரையிலும் யாரும் தங்க முடியாது என அறிவித்துள்ளனர்.