சுயாதீன கட்சி பிரதிநிதிகளுடன் பிரதமரின் சந்திப்பு இன்று!

0
483

சிறிலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஆளும் கட்சியிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் 10 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பு இன்று முற்பகல் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு பிரதமர் எடுக்கும் சரியான தீர்மானங்களுக்கு தமது தரப்பு ஆதரவு வழங்கவுள்ளதாக ஆளும் கட்சியிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற குழு அறிவித்துள்ளது.

அத்துடன், புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக சிறிலங்கா சுதந்திர கட்சி நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுக்கூட்டம் இன்று முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.

கட்சியின் தலைவர் முன்னாள் அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில், சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.