தாயகத்தில் 1000 விகாரைகளை கட்ட ஆதரவளிக்கும் கூட்டமைப்பு!

0
655

வடக்கு கிழக்கில் 1000 விகாரைகளை கட்டுவதற்கு கண்ணை மூடிக்கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கி இருக்கின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் 4 ஆம் நாளினை நினைவுகூறும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சியை நினைவுகூறும் நிகழ்வொன்று அம்பாறை மாவட்டம் வீரமுனை பகுதியில் உள்ள படுகொலை நினைவுத்தூபி முன்பாக இன்று(15) இடம்பெற்ற வேளை மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது,

“எமது மக்களுக்கு ரணிலின் கடந்த கால நரித்தனமான போக்கு நன்கு தெரியும். அவர் எமது மக்களை மெது மெதுவாக கருவறுப்பார். 6 ஆவது தடவையாக அவர் பிரதம மந்திரியாக வந்திருக்கின்றார் என நான் நினைக்கின்றேன்.

இவரது ஆட்சிக்காலத்தில் எமது மக்களை மிக மோசமான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

கடந்த நல்லாட்சியிலும் கூட, வடக்கு கிழக்கில் 1000 விகாரைகளை கட்டுவதற்கு இவர் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு கண்ணை மூடிக்கொண்டு குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கி இருக்கின்றது.