இலங்கை தொடர்பான புதிய பயண அறிவுறுத்தலை பிரித்தானிய அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் (FCDO) தற்போது அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மை காரணமாக இலங்கைக்கான அத்தியாவசியப் பயணங்களைத் தவிர மற்ற அனைத்தையும் தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறது.
அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் பாதுகாப்பு அதிகாரிகள் கண்ணீர்ப்புகை மற்றும் நீர் பீரங்கிகளை பிரயோகித்த அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக மே 9 ஆம் திகதி வன்முறைகள் உட்பட பல சம்பவங்கள் இடம்பெற்றன.
கொழும்பு, கண்டி மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் உள்ள பெய்ரா ஏரிக்கு அருகாமையிலும் சம்பவங்கள் இடம்பெற்று காயங்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
இந்நிலையில் அங்கு மேலும் பல சம்பவங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாக ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது.