ரணிலின் நாட்குறிப்பில் இன்று!

0
588

நாட்டின் புதிய பிரதமராக நேற்றையதினம் பதவிப்பிரமாணம் செய்த ரணில் விக்கிரமசிங்க அலரிமாளிகைக்கு இன்று காலை சென்று கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

அதன்பின்னர் ராஜதந்திரிகள் பலரும் நேரில் சென்று புதிய பிரதமருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை முன்னதாக மலர் கொத்துடன் சென்ற இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிர் கோபால் பாக்லே (Gopal Baglay), பிரதமர் ரணிலை இன்று காலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில் இன்று பிற்பகல் ​வேளையில் அலரிமாளிகைக்குச் சென்ற இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung), பிரதமர் ரணிலை சந்தித்து நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன்பின்னர், இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் ஹிடேகி மிசுகோஷி  (H.E Mizukoshi Hideaki) பிரதமர் ரணிலை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

மேலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்களும் ரணிலுடன் சந்தித்துப் ​​பேச்சுவார்த்தை நடத்துகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.