முதல் ஆளாக ரணிலை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்!

0
445

பிரதமரை ரணில் விக்கிரமசிங்கவை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று சந்தித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அலரிமாளிகையில் தனது கடமைகளை சற்றுமுன்னர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

அதன்பின்னர், நாட்டின் தற்போதை நிலைமை மற்றும் எதிர்காலத்திட்டங்கள் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பில். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

நாடு பொருளாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் , இலங்கைக்கு உதவிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று ஆகும்.

அதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர்  அவரை சந்திக்கும் முதல்  வெளிநாட்டு உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே என்பது குறிப்பிடத்தக்கது.