இராணுவ ஆட்சியை அமைப்பது குறித்து பாதுகாப்பு செயலாளர்!

0
640

இலங்கையில் இராணுவ ஆட்சியை அமைப்பது சிரமமான விடயமாகும். அதேபோல் இராணுவ ஆட்சியை உருவாக்கும் மனோநிலையில் நாமும் இல்லை. எனவே இலங்கையால் இராணுவ ஆட்சி உருவாகும் என எவரும் அச்சப்பட வேண்டியதில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்தார்.

போராட்டங்கள் என்ற பெயரில் வன்முறைகள் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றதை அடுத்தே அவசரகால நிலைமையின் கீழான மற்றும் ஊரடங்கு சட்டத்தின் கீழான முழுமையான அதிகாரங்களை பயன்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது எனவும் அவர் தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், இராணுவ ஆட்சியை உருவாக்குவதற்கான எந்தவொரு திட்டமும் தற்போதைய இராணுவத் தளபதியின் கீழுள்ள இராணுவத்தினருக்கு இல்லை. இராணுவ ஆட்சியை உருவாக்கும் மனோநிலை எமது இராணுவத்தினருக்கும் இல்லை. நாட்டில் வன்முறைகள் இடம்பெறும்போது நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக இராணுவத்தினர் களமிறக்கப்படுவார்கள்.

கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்குப் பின்னர் அடுத்த 48 மணித்தியாலங்கள் இலங்கை லிபியாவாக மாறியிருந்தது. பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டன. இவ்வாறான நிலையில் இந்தியாவின் சிரேஸ்ட தலைவர் சுப்ரமணியின் சுவாமி ‘‘எமது அண்டை நாடான இலங்கை லிபியாவாக மாறுவதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.