பாதுகாப்பு அமைச்சினால் விடுக்கப்பட்ட முக்கிய அறிவுறுத்தல்!

0
547

நாட்டில் உள்ள வன்முறைக் கும்பல்களை கட்டுப்படுத்த தேவைப்படும் போது துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட சட்டரீதியான பலத்தை பயன்படுத்த முப்படைகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த அறிவுறுத்தல் பாதுகாப்பு அமைச்சினால் நேற்றைய தினம் (11-05-2022) வழங்கப்பட்டுள்ளது. 

சட்டவிரோத கும்பல் மற்றும் வன்முறைக் குழுக்களால் வாகனங்களைச் சோதனையிடுதல், பொது மற்றும் தனியார் சொத்துக்களைச் சேதப்படுத்துதல், கொள்ளையடித்தல் மற்றும் தாக்குதல் நடத்துதல் போன்ற சம்பவங்களை கட்டுப்படுத்துவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.