இலங்கை தனியார் பஸ் சங்க சம்மேளனத்தின் தீர்மானம்

0
762

இனி அரசியல் நடவடிக்கைகளுக்காக தனியார் பஸ்களை வழங்குவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார்.

தனியார் பஸ் உரிமையாளர்கள் அலரிமாளிகையில் நடத்தப்படும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக வாடகை அடிப்படையிலும் சிலர் தனிப்பட்ட இலாப நோக்கத்திற்காகவும் இவ்வாறு பஸ்களை வழங்கி இருந்ததாக அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், எதிர்காலத்தில் அரசியல் நடவடிக்கைகளுக்காக தனியார் பஸ்களை வழங்குவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களால் காலிமுகத்திடலில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து கொழும்பிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் 20இற்கும் மேற்பட்ட தனியார் பஸ்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

May be an image of 1 person and outdoors