ஊரடங்கு தளர்த்தப்பட்டால் மின்வெட்டு நேரம் அதிகரிக்கும்

0
540

ஊரடங்குச் சட்டம் நாளை தளர்த்தப்பட்டால்  மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் நேரம் அதிகரிக்கும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார். 

அவ்வாறில்லாமல் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்றால் மின்வெட்டில் மாற்றமின்றி வழமைப் போல 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அவர் அறிவித்துள்ளார். 

எனினும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுமாயின், எரிபொருள் கிடைக்காமை மற்றும் அதிகப்படியான தேவை காரணமாக மின்வெட்டு, 5 மணிநேரமாக அதிகரிக்கப்படுமென ஆணைக்குழு தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.