யுத்தகளமாக மாறிய நாடு..! காரணம் மஹிந்த – கோட்டாபயவே!

0
498

நாட்டை யுத்தகளமாக மாற்றியதன் பொறுப்பை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, (Mahinda Rajapaksa) ஜனாதிபதி ஜனாதிபதி (Gotabaya Rajapaksa) உள்ளிட்ட அனைவரும் ஏற்க வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் (Omalpe Sobitha Thero) தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் பதவி விலகலை தொடர்ந்து சர்வமத தலைவர்கள் நேற்று (09-05-2022) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் குறித்த சந்திப்பு தொடர்பாக கருத்து வெளியிடும் போதே ஓமல்பே சோபித தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் காலி முகத்திடல் அமைதி வழி ஆர்ப்பாட்டக் களத்தில் மேற்கொண்ட தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நாட்டை யுத்தகளமாக மாற்றியதன் பொறுப்பை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் ஏற்க வேண்டும்.

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஜனாதிபதியிடம் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினோம். சம்பவம் தொடர்பில் முறையான மற்றும் துரிதகரமான விசாரணைகளை முன்னெடுப்பதாக அவர் உறுதியளித்தார்.

சம்பவ இடத்தில் பொலிஸார் செயற்பட்ட விதம் வெறுக்கத்தக்கது. பொலிஸ்மா அதிபர் குறித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

கட்சி சாரா பிரதமர் தலைமையில் 15 பேரை உள்ளடக்கிய வகையில் சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்கவும், சிவில் தரப்பின் துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய விசேட ஆலோசனை குழுவை ஸ்தாபிக்கவும் ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டுள்ளார். எனக் குறிப்பிட்டுள்ளார்